sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்

/

நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்

நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்

நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்


ADDED : நவ 05, 2025 11:44 PM

Google News

ADDED : நவ 05, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டின் முதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சே கவுடா, 55; விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், மேம்பாட்டுப் பணிக்காக, மஞ்சே கவுடாவின் 2 ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 49 வீடுகள் கட்டி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், நிலத்துக்கான நிவாரணமோ அல்லது மாற்று நிலமோ அரசு வழங்கவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் மனு கொடுக்க கடந்த 3ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு மஞ்சே கவுடா வந்தார். பின், எதிரே உள்ள காவேரி பூங்காவிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கிய அவர், மறுநாள் நவ., 4ம் தேதி பார்க்கில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதை பார்த்த பூங்காவில் இருந்தவர்கள், போலீசா ர், அவரை மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை மஞ்சே கவுடா உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி, மருத்துவமனையில் விவசாயி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது மனைவிக்கு ஆறுதல் கூறி, ''ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என, உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us