/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்க முட்டையிடும் வாத்துகள் விவசாயிகள் சங்கம் கண்டனம்
/
தங்க முட்டையிடும் வாத்துகள் விவசாயிகள் சங்கம் கண்டனம்
தங்க முட்டையிடும் வாத்துகள் விவசாயிகள் சங்கம் கண்டனம்
தங்க முட்டையிடும் வாத்துகள் விவசாயிகள் சங்கம் கண்டனம்
ADDED : ஜூலை 17, 2025 11:03 PM
தங்கவயல்: ''மருத்துவத்துறையினருக்கு நோயாளிகள், தங்க முட்டையிடும் வாத்துகளாக உள்ளனர்,'' என்று மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.நாராயணகவுடா தெரிவித்து உள்ளார்.
தங்கவயல் தாலுகா விவசாயிகள் சங்க கூட்டம், மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.நாராயணகவுடா தலைமையில் பயணியர் விடுதியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின், அவர் அளித்த பேட்டி:
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தொகுதி வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் நிதியை பெற்று வந்துள்ளார்; வேலைகளும் நடக்கின்றன.
அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் ஊழலை அவர் சரி செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவமனையில் பணம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இல்லை என்றால், பல காரணங்களை சொல்லி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மருத்துவத் துறையினருக்கு நோயாளிகள், தங்க முட்டையிடும் வாத்துக்களாக உள்ளனர். ஊசி முதல் மருந்து, மாத்திரை வரை வெளியே வாங்கி வருமாறு சீட்டு எழுதி தருகின்றனர். இவர்களுக்கிடையே உள் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாலுகா விவசாயிகள் சங்க தலைவர் ராம்சாகர் வேணு கூறுகையில், ''தங்கவயலின் பல்வேறு கிராமங்களில் போலி கிளினிக்குகள் பெருகி வருகின்றன. இது பற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி கண்டு கொள்வதே இல்லை. அவரை காண்பது அரிதாக உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் அரசு மருத்துவமனை முன்பு கால்நடைகளுடன் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.