ADDED : ஜூலை 09, 2026 09:09 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டையில் அரசு மருத்துவமனை செவிலியர் குடியிருப்பில் குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, ராபர்ட்சன் பேட்டை 1-வது கிராசில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு காம்பவுண்ட்டுக்குள் குப்பை குவிந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு
அந்த குப்பை குவியலில் இருந்து திடீரென தீப்பிடித்து, பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
