/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழுதடைந்த படகு அலைகளால் பிழைத்த மீனவர்கள்
/
பழுதடைந்த படகு அலைகளால் பிழைத்த மீனவர்கள்
ADDED : செப் 16, 2025 05:08 AM

தட்சிணகன்னடா: ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற படகின் இன்ஜின் திடீரென பழுதடைந்தது. அதில் இருந்த, 13 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தட்சிணகன்னடா மாவட்டம், உல்லாலின் முக்கச்சேரி கிராமத்தில் வசிப்பவர் முகமது அஷ்வாக். இவர் மீன்பிடி தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, அரபிக்கடலுக்குள் மீன் பிடிக்க மங்களூரின் துறைமுகத்தின் தக்கேவில் இருந்து இவரது படகு புறப்பட்டது. அதில் 13 மீனவர்கள் இருந்தனர்.
நள்ளிரவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகின் இன்ஜின் பழுதடைந்தது. நள்ளிரவாக இருந்ததால் மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், இதை கவனிக்கவில்லை. பழுதடைந்த படகில் இருந்தவர்கள், உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
ராட்சத அலைகளில் மிதந்தபடியே வந்த படகு, நேற்று அதிகாலை உல்லாலின் சீ கிரவுன்ட் என்ற இடத்தில் கடற்கரையில் தரைதட்டியது. 13 மீனவர்களும் அலைகளின் உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
படகு சேதம் அடைந்ததால், உரிமையாளருக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, உல்லால் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.