/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
/
'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
'மாஜி' முதல்வரின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 22, 2026 05:24 AM

சஞ்சய் நகர்: பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தனி செயலர் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு சஞ்சய் நகரை சேர்ந்தவர் சந்துரு. இவர், பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தனி செயலராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் ஹேமந்த், 22. லோட்டெ கொள்ளஹள்ளியில் இறுதியாண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
குடும்பத்தினருடன் நேற்று காலை திருப்பதி செல்ல சந்துரு தயாராகி வந்தார். இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்ல உறவினர்களும் வந்திருந்தனர். ஆனால், ஹேமந்த் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற் கொலை செய்து கொண் டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவி ல்லை.
சஞ்சய் நகர் போலீ சார் விசாரிக்கின்றனர்.

