sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தடகளம், ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் துவக்கம்

/

தடகளம், ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் துவக்கம்

தடகளம், ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் துவக்கம்

தடகளம், ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் துவக்கம்


ADDED : ஏப் 05, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: கோலாரில் தடகள விளையாட்டு, ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

கோலாரில் உள்ள சர்.எம். விஸ்வேஸ்வரய்யா மைதானத்தில், தடகள விளையாட்டு மற்றும் ஜூடோ கோடைக்கால பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது.

பாராலிம்பிக் விளையாட்டு சங்கத் தலைவர் ஜெயதேவ் பயிற்சியை துவக்கி வைத்து, சிறுவர்களுக்கு விளையாட்டுக்கான சீருடைகள் வழங்கினார்.

இந்த முகாம், இரு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக நேற்று துவங்கி மே 1 வரையிலும், 2ம் கட்டமாக மே 1 முதல் மே 26 வரையிலும் நடத்தப்படுகிறது.

தடகள விளையாட்டுகளில் பங்கேற்க 10 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், ஜூடோ பயிற்சிக்கு 10 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விளையாட்டு பயிற்சியாளர் ஜெகன் கூறுகையில், ''விளையாட்டில் ஈடுபாடு இருந்தால் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். சோர்வு ஏற்படாது. எப்போதுமே உற்சாகமாக இருக்கலாம். எனவே விளையாட்டில் சிறு வயதிலேயே ஈடுபாடு மிக அவசியம்.

''நேரத்தை வீணாக்காமல், முடங்கி கிடக்காமல் விளையாட்டில் சிறுவர்கள் கவனம் செலுத்தி, சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

''பெற்றோரும் ஊக்கம் அளிக்க வேண்டும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கோலாரில் தேசிய விளையாட்டுப் போட்டி நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us