ADDED : ஏப் 26, 2025 09:16 AM

அ நிறம் | அளவு
சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி ருத்ரம்மா. தம்பதியருக்கு ஸ்பந்தனா, 11, என்ற மகள் இருந்தார்.
இவரிடம் சைக்கிள் இல்லை. எனவே பக்கத்து வீட்டு தோழியின் சைக்கிளை ஓட்டுவார். நேற்று மதியம் சைக்கிள் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தோழி தர மறுத்துள்ளார். இதனால் மனம் நொந்த ஸ்பந்தனா, வீட்டுக்குள் சென்று துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும், அறைக்கதவு திறக்கப்படவில்லை. பெற்றோர் பல முறை தட்டியும் திறக்கவில்லை. அதன்பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ஹிரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
