sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயல் செக் போஸ்ட்!

/

தங்கவயல் செக் போஸ்ட்!

தங்கவயல் செக் போஸ்ட்!

தங்கவயல் செக் போஸ்ட்!


ADDED : ஏப் 14, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெமல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எண்ணிக்கை சரிவில் உள்ளது. ஆனால், இங்கு உற்பத்திக்கான ஆர்டர்கள் மட்டும் குவிகின்றன. வேலை பளு மேலும் அதிகரிக்கும் என தொழிலாளர்கள் தரப்பினர் கருதுகின்றனர்.

தற்காலிக பணியாளர்களை வைத்துக் கொண்டு, உற்பத்தியை சாதித்து காட்ட முடியும் என மேனேஜ்மென்ட் நம்புது. ஆர்வத்தை ஏற்படுத்த அவங்களுக்கு ம.அரசு அறிவிப்புபடி சம்பள உயர்வு வழங்க போறாங்களாம். மெட்ரோ ரயில் பெட்டிகள் ஆர்டர் பெமலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமாம். தொழிலில் பாதிப்பு ஏற்படாதபடி வெளியூர்காரங்களை தான் தற்காலிக வேலைக்கும் களம் இறக்க போறாங்களாம்.

மேடை கிடைக்கும் போதெல்லாம் கோல்டு சிட்டியில் தொழிற் பூங்கா, டவுன் ஷிப் உருவாகப் போகுதென சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றாங்க. இதன் பணிகள் எப்போ தான் துவங்குமோ.

'இண்டஸ்ட்ரியல் பார்க்' உருவாக்க எந்த மாதிரி கம்பெனிகள் வரும்னு தெரியலையே. மல்டி நேஷனல் கம்பெனிகள், ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், ஹார்ட்வேர், சாப்ட்வேர், உள்நாட்டு நிறுவனங்கள் என எல்லாமே வரப் போகுதுன்னு சொல்லியே காலம் தள்ளுவாங்களோ.

மின் உற்பத்தி நிலையம் துவங்குவதாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செஞ்சாங்க. ஆனா, ராய்ச்சூருக்கு இடம் மாறிப்போன பழைய நினைவுகள் தான் ஞாபகத்துக்கு வருவதாக ஊருக்குள்ளே பேச்சு இருக்குது.

அதனாலே, 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என வாய்ச்சொல் விளையாட்டுகளை நடத்தாமல், சட்டு புட்டுன்னு வேலையை எப்போ தான் துவங்க போறீங்க என்பதை மேடம் சொல்வாங்களா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காலி நிலம் அபகரிப்புக்கு வழியாகுமா என ஜனங்க கேட்குறாங்களே.

ஹைகோர்ட் உத்தரவு இருந்தும் கூட நடைபாதைக்கு இடம் விடாமல் பேனர்கள் வைப்பதை அனுமதிக்கலாமா. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா. இதனை அனுமதித்த கவுன்சில் என்ன பதிலை தர போகுது.

ரா.பேட்டை இதய பகுதியான சதுக்கத்தில் பேனர் வைக்க முனிசி., எப்படி அனுமதி கொடுக்கலாம். பேனர்கள் வைத்துக் கொள்ள இதுவரை முனிசி.,க்கு எவ்வளவுதான் வருமானம் வந்தது. நடைபாதைகளில் பேனர் தானே வைத்திருக்காங்க என நினைத்துக் கொண்டாலும், கட்டடங்களே கட்டியுள்ளதை தட்டிக்கேட்க கவுன்சிலில் யாருக்குமா தைரியம் வரவில்லை.

ப.பேட்டை முக்கிய சாலையை விரிவுபடுத்த பாரபட்சம் பார்க்காம ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கோல்டு சிட்டி ஏன் பாலோ பண்ண துணிவு இல்லாமல் போனது.

சட்டப் பிதா பெயரில் ரா.பேட்டை 3வது கிராஸ் பகுதியில் உள்ள 'பவன்' யாரோ சிலர் செருப்பு கடை வைத்துக்கொள்ள குடோனாக பயன்படுத்தினாங்கன்னு தெரியவந்தது.

செருப்பு கடைக்காவது காலியாக இருந்த கட்டடம் பயன்படுகிறதேன்னு கவனிச்சாங்க. அதை முனிசி., ஆபீசர்கள், 'டேக் ஓவர்' செய்துட்டாங்க. ஆனால் இதுவரையில் அந்த கட்டடம் காலியாக தான் இருக்குதே தவிர நுாலகம் அல்லது படிப்பகமாக மாற்றலாமே. இப்படியே விட்டால் அது சட்டவிரோத கும்பலுக்கு சொந்தமாகிடுமோ என யோசிக்க வெச்சிருக்கு.

பயனற்ற கட்டடம்!



பெமல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எண்ணிக்கை சரிவில் உள்ளது. ஆனால், இங்கு உற்பத்திக்கான ஆர்டர்கள் மட்டும் குவிகின்றன. வேலை பளு மேலும் அதிகரிக்கும் என தொழிலாளர்கள் தரப்பினர் கருதுகின்றனர்.

தற்காலிக பணியாளர்களை வைத்துக் கொண்டு, உற்பத்தியை சாதித்து காட்ட முடியும் என மேனேஜ்மென்ட் நம்புது. ஆர்வத்தை ஏற்படுத்த அவங்களுக்கு ம.அரசு அறிவிப்புபடி சம்பள உயர்வு வழங்க போறாங்களாம். மெட்ரோ ரயில் பெட்டிகள் ஆர்டர் பெமலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமாம். தொழிலில் பாதிப்பு ஏற்படாதபடி வெளியூர்காரங்களை தான் தற்காலிக வேலைக்கும் களம் இறக்க போறாங்களாம்.

மேடை கிடைக்கும் போதெல்லாம் கோல்டு சிட்டியில் தொழிற் பூங்கா, டவுன் ஷிப் உருவாகப் போகுதென சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றாங்க. இதன் பணிகள் எப்போ தான் துவங்குமோ.

'இண்டஸ்ட்ரியல் பார்க்' உருவாக்க எந்த மாதிரி கம்பெனிகள் வரும்னு தெரியலையே. மல்டி நேஷனல் கம்பெனிகள், ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், ஹார்ட்வேர், சாப்ட்வேர், உள்நாட்டு நிறுவனங்கள் என எல்லாமே வரப் போகுதுன்னு சொல்லியே காலம் தள்ளுவாங்களோ.

மின் உற்பத்தி நிலையம் துவங்குவதாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செஞ்சாங்க. ஆனா, ராய்ச்சூருக்கு இடம் மாறிப்போன பழைய நினைவுகள் தான் ஞாபகத்துக்கு வருவதாக ஊருக்குள்ளே பேச்சு இருக்குது.

அதனாலே, 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என வாய்ச்சொல் விளையாட்டுகளை நடத்தாமல், சட்டு புட்டுன்னு வேலையை எப்போ தான் துவங்க போறீங்க என்பதை மேடம் சொல்வாங்களா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காலி நிலம் அபகரிப்புக்கு வழியாகுமா என ஜனங்க கேட்குறாங்களே.

ஹைகோர்ட் உத்தரவு இருந்தும் கூட நடைபாதைக்கு இடம் விடாமல் பேனர்கள் வைப்பதை அனுமதிக்கலாமா. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா. இதனை அனுமதித்த கவுன்சில் என்ன பதிலை தர போகுது.

ரா.பேட்டை இதய பகுதியான சதுக்கத்தில் பேனர் வைக்க முனிசி., எப்படி அனுமதி கொடுக்கலாம். பேனர்கள் வைத்துக் கொள்ள இதுவரை முனிசி.,க்கு எவ்வளவுதான் வருமானம் வந்தது. நடைபாதைகளில் பேனர் தானே வைத்திருக்காங்க என நினைத்துக் கொண்டாலும், கட்டடங்களே கட்டியுள்ளதை தட்டிக்கேட்க கவுன்சிலில் யாருக்குமா தைரியம் வரவில்லை.

ப.பேட்டை முக்கிய சாலையை விரிவுபடுத்த பாரபட்சம் பார்க்காம ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கோல்டு சிட்டி ஏன் பாலோ பண்ண துணிவு இல்லாமல் போனது.

சட்டப் பிதா பெயரில் ரா.பேட்டை 3வது கிராஸ் பகுதியில் உள்ள 'பவன்' யாரோ சிலர் செருப்பு கடை வைத்துக்கொள்ள குடோனாக பயன்படுத்தினாங்கன்னு தெரியவந்தது.

செருப்பு கடைக்காவது காலியாக இருந்த கட்டடம் பயன்படுகிறதேன்னு கவனிச்சாங்க. அதை முனிசி., ஆபீசர்கள், 'டேக் ஓவர்' செய்துட்டாங்க. ஆனால் இதுவரையில் அந்த கட்டடம் காலியாக தான் இருக்குதே தவிர நுாலகம் அல்லது படிப்பகமாக மாற்றலாமே. இப்படியே விட்டால் அது சட்டவிரோத கும்பலுக்கு சொந்தமாகிடுமோ என யோசிக்க வெச்சிருக்கு.

பயனற்ற கட்டடம்!








      Dinamalar
      Follow us