sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பரப்பன அக்ரஹாரா சிறை 3 ஆக பிரிக்க அரசு ஒப்புதல்

/

பரப்பன அக்ரஹாரா சிறை 3 ஆக பிரிக்க அரசு ஒப்புதல்

பரப்பன அக்ரஹாரா சிறை 3 ஆக பிரிக்க அரசு ஒப்புதல்

பரப்பன அக்ரஹாரா சிறை 3 ஆக பிரிக்க அரசு ஒப்புதல்


ADDED : ஏப் 07, 2025 07:22 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பாதுகாப்பு, நிர்வாக வசதிக்காக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை மூன்றாக பிரிக்க, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகாவில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 54 சிறைகள் உள்ளன. மொத்தம் 14,645 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மட்டும் 4,800 பேர் உள்ளனர்.

இது, 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதன்மை சூப்பிரண்ட், ஒரு சூப்பிரண்ட், ஒரு உதவி சூப்பிரண்ட் உட்பட 800 போலீசார், ஊழியர்கள் இருக்க வேண்டும். தற்போது 400 பேர் மட்டுமே உள்ளனர்.

சிறையில் நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் அளிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சிறை துறை புதிய டி.ஐ.ஜி.,யாக திவ்யாஸ்ரீயை மாநில அரசு நியமித்தது.

இந்நிலையில், சிறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, அரசுக்கு சமர்ப்பித்த மனுவில், 'பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையைதண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண்கள் சிறை என மூன்றாக பிரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட மாநில அரசு, மூன்றாக பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

டி.ஐ.ஜி., திவ்யாஸ்ரீ கூறுகையில், ''மூன்றாக பிரிப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் பிரிவு இடையே ஏற்கனவே மிகப்பெரிய சுவர் கட்டப்பட்டு உள்ளது. தனி சிறையாக, அதிக பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us