sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 அடுக்குமாடி கட்டடங்களில்  இரண்டு குப்பை தொட்டிகள் ஜி.பி.ஏ., கமிஷனர் உத்தரவு

/

 அடுக்குமாடி கட்டடங்களில்  இரண்டு குப்பை தொட்டிகள் ஜி.பி.ஏ., கமிஷனர் உத்தரவு

 அடுக்குமாடி கட்டடங்களில்  இரண்டு குப்பை தொட்டிகள் ஜி.பி.ஏ., கமிஷனர் உத்தரவு

 அடுக்குமாடி கட்டடங்களில்  இரண்டு குப்பை தொட்டிகள் ஜி.பி.ஏ., கமிஷனர் உத்தரவு


ADDED : மார் 04, 2026 05:48 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மக்கும், மக்கா குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்ற, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பெங்களூரு கி ழக்கு மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

பெங்களூரு கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மக்கும், மக்கா குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகள் கட்டாயம் வைக்க வேண்டும். இது தொடர்பாக, அதிகாரிகள் உ டனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.

அந்த சுற்றறிக்கையை, சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு அனுப்ப வேண்டும். அவற்றின் வளாகங்களுக்குள் தனித்தனி குப்பை தொட்டிகள் நிறுவுவதை அறிவுறுத்த வேண்டும்.

கே.ஆர்.,புரம் சட்டசபை தொகுதிக்குள் உள்ள முக்கிய சாலைகளை ஆய்வு செய்து, நடைபாதைகள் பழுதுபார்க்க வேண்டிய பகுதிகள் மற்றும் புதிய நடைபாதைகள் கட்டப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us