sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

/

ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்


ADDED : செப் 20, 2025 04:59 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு: பெங்களூரு ஹலசூரில் சுயம்பு காளி அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா நாளை துவங்கி, அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது.

தினமும் காலை 7:30 மணிக்கு அபிஷேகம்; காலை 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி; இரவு 8:15 மணிக்கு மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடக்கிறது.

துவக்க நாளான நாளை அம்மனுக்கு, விநாயகர் அலங்காரம்; 22ம் தேதி அர்த்தநாரீஸ்வரர்; 23ம் தேதி தனலட்சுமி; 24ம் தேதி தேவி கெம்பம்மா; 25ம் தேதி சாகம்பரி; 26ம் தேதி சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம்; காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மஹா சண்டி ஹோமம் நடக்கிறது.

வரும் 27ம் தேதி மதுரை மீனாட்சி; 28ம் தேதி தேவி கருமாரி அம்மன்; 29ம் தேதி சரஸ்வதி; 30 ம் தேதி திருச்செந்துார் முருகன்; 1ம் தேதி கொல்கட்டா காளி; 2ம் தேதி ராஜராஜேஸ்வரி; 3ம் தேதி லட்சுமி நரசிம்மசுவாமி; 4ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா; 5ம் தேதி அன்ன அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது.

அன்றைய தினம் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தரிசனம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு, மஹா அபிஷேகம் நடக்கிறது. இதனால் பக்தர்கள் சீக்கிரம் வந்து, அன்ன அலங்காரத்தை தரிசனம் செய்து கொள்ளும்படி கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விழா ஏற்பாடுகளை பத்மநாபன் சாமி மகன்கள் பார்த்திபன், சந்தானம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us