sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பாக்., கொடியை அவமதித்த பஜ்ரங் தள் அமைப்பினர் கைதா?

/

பாக்., கொடியை அவமதித்த பஜ்ரங் தள் அமைப்பினர் கைதா?

பாக்., கொடியை அவமதித்த பஜ்ரங் தள் அமைப்பினர் கைதா?

பாக்., கொடியை அவமதித்த பஜ்ரங் தள் அமைப்பினர் கைதா?


ADDED : ஏப் 27, 2025 05:04 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி : ''கலபுரகியில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை, சாலையை ஒட்டி அவமதிப்பு செய்த, பஜ்ரங் தள் அமைப்பினர் 6 பேர் கைது செய்யப்படவில்லை,'' என, போலீஸ் கமிஷனர் சரணப்பா விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலபுரகியில் நேற்று முன்தினம் மாலை நடந்த போராட்டத்தின்போது, ஜகத் சதுக்கம், ஆலந்த் நாகா, மார்க்கெட் சவுக், சாத் கும்பாஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில், பாகிஸ்தான் நாட்டின் கொடியை கம், பேஸ்ட் போட்டு பஜ்ரங் தள் அமைப்பினர் ஒட்டினர்.

அந்த வழியாக சென்ற வாகனங்கள், கொடி மீது ஏறிச் சென்றன. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று, பஜ்ரங் தள் அமைப்பின் 6 பேரை பிடித்துச் சென்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா நேற்று இதை மறுத்தார். “பஜ்ரங் தள் தொண்டர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை விடுவித்துவிட்டோம்,” என்றார்.

இதற்கிடையில் சாலையில் ஒட்டப்பட்டு இருந்த, பாகிஸ்தான் நாட்டின் கொடியை இரண்டு பெண்கள் அகற்றினர். 'பயங்கரவாதிகள் செய்த தவறுக்காக, பாகிஸ்தான் கொடியை அவமதிக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 'இந்தியாவிலும், பாகிஸ்தான் நாட்டின் ஆதரவாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்' என்று, சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.






      Dinamalar
      Follow us