sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் 'யூனிட்டி மால்' கட்ட ஐகோர்ட் தடை

/

 மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் 'யூனிட்டி மால்' கட்ட ஐகோர்ட் தடை

 மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் 'யூனிட்டி மால்' கட்ட ஐகோர்ட் தடை

 மைசூரு பொருட்காட்சி வளாகத்தில் 'யூனிட்டி மால்' கட்ட ஐகோர்ட் தடை


ADDED : டிச 11, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு நகரின் பொருட்காட்சி மையத்தின் வளாகத்தில், மத்திய அரசு செயல்படுத்தும், 'யூனிட்டி மால்' திட்டத்துக்கு, அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, தடை உத்தரவு பெற்றுள்ளார்.

மைசூரு நகரில் உள்ள, பொருட்காட்சி மையத்தின் வளாகத்தில், தனியார் மற்றும் அரசு ஒருங்கிணைப்பில், 'யூனிட்டி மால்' கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உள் நாட்டில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களுக்கு, மார்க்கெட் வசதி செய்து தருவது, திட்டத்தின் நோக்கமாகும்.

பொருட்காட்சி வளாகத்தின், 6.5 ஏக்கரில், 193 கோடி ரூபாய் செலவில், மால் கட்டி, நாட்டின் பல்வேறு 36 வர்த்தக கடைகள் திறக்க முடிவு செய்தது. கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு கடைகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களின் கைவினை பொருட்களை விற்பனை செய்ய, கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது, மத்திய அரசின் எண்ணமாகும்.

நடப்பாண்டு ஜூலை 27ல், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், யூனிட்டி மால் கட்ட அடிக்கல் நாட்டினார். பணிகளும் நடந்து வந்தன. ஆனால் பாரம்பரியமிக்க பொருட்காட்சி வளாகத்தில், வேறு கட்டடம் கட்ட அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அந்த இடத்தில் எந்த கட்டடமும் கூடாது என, நேற்று உத்தரவிட்டுள்ளது. மகன் துவக்கி வைத்த பணிகளுக்கு, தாய் தடை உத்தரவு பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us