sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபரை கொன்ற கணவர்

/

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபரை கொன்ற கணவர்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபரை கொன்ற கணவர்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபரை கொன்ற கணவர்


ADDED : செப் 18, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின் ஷஹாபந்தரா கிராமத்தில் வசிப்பவர் பசவராஜ் புகநட்டி, 32. இவரது மனைவியுடன் அதே கிராமத்தின் மஹாந்தேஷ், 24, என்பவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்டனர்.

இது கணவர் பசவராஜுக்கு தெரிந்தது. கோபமடைந்த அவர், மஹாந்தேஷ் மீது, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

அதன்பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையில், பஞ்சாயத்து நடந்தது. அப்போது மஹாந்தேஷ், இனி பசவராஜின் மனைவியுடன் பழகுவதில்லை என, உறுதி அளித்தார். அதன்படி தன் தவறை திருத்தி கொண்டு, வேலையில் கவனம் செலுத்தினார். ஆனால் இவர் மீதான கோபம், பசவராஜுக்கு போகவில்லை. மஹாந்தேஷை கொலை செய்ய, நேரம் பார்த்து காத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, தன் கூட்டாளிகளுடன் புதர் மறைவில் பசவராஜ் காத்திருந்தார். மஹாந்தேஷ் பஸ்சில் வந்திறங்கி, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசவராஜும், அவரது கூட்டாளிகளும், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த யம்கன்மரடி போலீசார், உடலை மீட்டனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us