sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தவில்லை மனைவி 'சைக்கோ' போல நடப்பதாக கணவர் 'திடுக்'

/

படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தவில்லை மனைவி 'சைக்கோ' போல நடப்பதாக கணவர் 'திடுக்'

படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தவில்லை மனைவி 'சைக்கோ' போல நடப்பதாக கணவர் 'திடுக்'

படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தவில்லை மனைவி 'சைக்கோ' போல நடப்பதாக கணவர் 'திடுக்'


ADDED : அக் 06, 2025 04:25 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டேனஹள்ளி : படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி, தன்னை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் அளித்த நிலையில், ரகசிய கேமரா பொருத்தவே இல்லை; மனைவி சைக்கோ போல நடந்ததாக, கணவர் பகீர் தகவல் கூறி உள்ளார்.

பெங்களூரு புட்டேனஹள்ளியில் வசிப்பவர் சையத் இனாமுல், 36. இவர் மீது, கடந்த 2ம் தேதி புட்டேனஹள்ளி போலீசில் மனை வி அளித்த புகாரில், 'என் கணவர் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி, என்னை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து துபாயில் உள்ள நண்பர்களுக்கு அனு ப்பி வைக்கிறார்' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரின்படி சையத் இனாமுல், அவரது நண்பர் சையது புகாரி, அவரது மனைவி ஹுனா கவுசர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சையத் இனாமுல் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது:

படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்ததாக, என் மீது மனைவி கூறிய குற்றச்சாட்டு பொய். திருமணத்திற்கு முன், என் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டது உண்மை தான். திருமணம் முடிந்த பெண், அவரது நடவடிக்கை மாறியது. சைக்கோ போல நடந்து கொண்டார். எனக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்தது உண்மை தான். இது என் மனைவிக்கும் தெரியும்.

மனைவியும், அவரது குடும்பமும் என்னிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.

இதில் 13 லட்சம் ரூபாய்க்கு என் மனைவிக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளேன்.

மனைவியின் சகோதரியும் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர். முன்னாள் கணவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

எந்த கணவனாவது, மனைவியின் ஆபாச புகைப்படம், வீடியோவை வேறு ஒருவருக்கு அனுப்பி வைப்பாரா. என் மனைவியும், அவரது குடும்பத்தினரும் எனக்கு மனரீதியாக தொல்லை கொடுத்தனர். நான் 21 திருமணம் செய்ததாக, என் மனைவி கூறுவது பொய். இரண்டு திருமணம் தான் செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சையத் இனாமுல் குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்து உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், 'என் கணவருக்கு உடலுறவில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனாலும், அவருக்கு ஆண்மை தன்மை இல்லை. சையத் இனாமுல் நண்பர் சையத் புகாரியின் மனைவி ஹீனா கவுசர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

'இதனால் எனக்கு, சையத் புகாரி பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு ஹீனாவும் உடந்தையாக இருந்தார். சையத் இனாமுலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். சையத் இனாமுல், சையது புகாரியின் மொபைல் போனை வாங்கி பார்த்தால் உண்மை தெரியும்' என்றார்.






      Dinamalar
      Follow us