sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கணவரின் கள்ளக்காதல் மனைவி தற்கொலை

/

கணவரின் கள்ளக்காதல் மனைவி தற்கொலை

கணவரின் கள்ளக்காதல் மனைவி தற்கொலை

கணவரின் கள்ளக்காதல் மனைவி தற்கொலை


ADDED : ஏப் 09, 2025 07:49 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெப்பால் : கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு, ஹெப்பால் கனகநகரை சேர்ந்தவர் பஷீர் உல்லா, 31. இவருக்கும், சாம்ராஜ்பேட் பாதராயனபுராவின் பஹார் அஸ்மா, 29 என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

பஷீர் தனியார் விமான நிறுவனத்தில் வேலை செய்தார். மாத சம்பளமாக 80,000 ரூபாய் வாங்கினார்.

திருமணம் முடிந்த ஆறு மாதத்தில், பஷீருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர்.

இதுபற்றி கேள்வி எழுப்பியதால் மனைவியுடன், பஷீர் தகராறில் ஈடுபட்டார். மனைவி குடும்பத்தினர் புத்திமதி கூறியும் கேட்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பஹார் அஸ்மா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் பஹார் அஸ்மாவை கொலை செய்து, உடலை துாக்கில் தொங்க விட்டதாக பஷீர் மீது, ஹெப்பால் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us