/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு
/
ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு
ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு
ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு
UPDATED : பிப் 15, 2025 05:12 PM
ADDED : பிப் 15, 2025 04:10 PM

பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர், நேற்று கர்நாடகா அரசு கருவூலம் சென்றனர்.
அங்கு நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி நேற்று துவங்கியது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர். அந்த வகையில் தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இதன் பிறகு அரசு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி கூறுகையில், சசிகலா அபராதமாக ரூ.20 கோடி செலுத்தி உள்ளார். வழக்கு செலவாக ரூ.7 கோடியை தமிழக அரசிடம் கேட்டு உள்ளோம் என்றார்.