/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பால் உற்பத்தி அதிகரிப்பு கே.எம்.எப்., சாதனை
/
பால் உற்பத்தி அதிகரிப்பு கே.எம்.எப்., சாதனை
ADDED : ஏப் 16, 2026 03:59 AM

பெங்களூரு: கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கோடைக்காலத்திலும் பால் உற்பத்தி 1.2 கோடி லிட்டரில் இருந்து, 1.16 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, கே.எம்.எப்., நிர்வாக அதிகாரி சிவசாமி கூறியதாவது:
பொதுவாக கோடைக்காலத்தில், பசுக்களுக்கு பசுமை தீவனம் பற்றாக்குறை ஏற்படும். பால் உற்பத்தி குறையும். ஆனால் நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தாலும், பால் உற்பத்தி குறையவில்லை. 2025ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு அன்றாட பால் உற்பத்தி, 85 லட்சம் லிட்டர் முதல் 87 லட்சம் லிட்டர் வரை இருந்தது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல் வாரம், 1.3 கோடி லிட்டராக இருந்த பால் உற்பத்தி, தற்போது 1.16 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. பல சவால்களுக்கு இடையே, பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு தரமான கால்நடை தீவனம் வினியோகிக்கப்படுகிறது. கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்ததால், பசுமை தீவனம் கிடைப்பதே பால் உற்பத்தி அதிகரிக்க காரணம்.
மக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில், பாலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க கே.எம்.எப்., ஆலோசிக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

