sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு

/

 ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு

 ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு

 ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு


ADDED : பிப் 09, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசுக்கு சொந்தமான 28 கோடி ரூபாய் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மீட்டது.

பெங்களூரு நகர மாவட்டம் தெற்கு தாலுகாவின் பிதரஹள்ளி, காஜிசொன்னஹள்ளி, கண்ணுார், பிங்கிபுரா, சேஷகிரிபுரா, தாவரகெரே, பாகலுார், எலஹங்கா, இட்டகலாபுரா, ஹட்டுகிடஹள்ளி, சொன்னேனஹள்ளி, தாசனபுரா, பையண்டஹள்ளி ஆகிய இடங்களில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டி இருப்பதும், கொட்டகை அமைத்து இருப்பதும், கலெக்டர் ஜெகதீசுக்கு தெரிந்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் ஒரே நாளில் 8.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது. இதன்மதிப்பு 27.72 கோடி ரூபாய் ஆகும். கலெக்டர் கூறுகையில், '' ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்கும், எங்கள் பணி தொடர்ந்து நடக்கும். மீட்கப்படும் நிலம் அரசு கணக்கில் சேர்க்கப்படும். நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us