sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நைஸ் சாலையில் வக்கீல் மர்ம சாவு

/

நைஸ் சாலையில் வக்கீல் மர்ம சாவு

நைஸ் சாலையில் வக்கீல் மர்ம சாவு

நைஸ் சாலையில் வக்கீல் மர்ம சாவு


ADDED : மே 03, 2025 11:10 PM

Google News

ADDED : மே 03, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கேரி: பெங்களூரின் நைஸ் சாலையில் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெங்களூரின் நைஸ் சாலையின் பன்னர்கட்டா - கனகபுரா வழித்தடத்தில் சாலையோரம் நேற்று முன்தினம் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் 'இண்டிகேட்டர்' போடப்பட்ட நிலையில் ஒரு காரும் நின்றது.

அந்த வழியாக சென்றவர்கள், கெங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் உயிரிழந்தவர், மாண்டியாவின் மலவள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், 52, என்று தெரிய வந்தது. வக்கீல் தொழில் செய்த அவர், கெங்கேரி அருகே உல்லாலில் குடும்பத்துடன் வசித்ததும் தெரியவந்தது.

அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தாக்கப்பட்டதற்கான அடையாளமும் உடலில் எதுவும் இல்லை. காரின் இருபுறமும் விபத்து நடந்ததற்கு தடங்கள் உள்ளன.

விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. கெங்கேரி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us