sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சட்டப்போராட்டம் ஜனா., மனைவி உருக்கம்

/

சட்டப்போராட்டம் ஜனா., மனைவி உருக்கம்

சட்டப்போராட்டம் ஜனா., மனைவி உருக்கம்

சட்டப்போராட்டம் ஜனா., மனைவி உருக்கம்


ADDED : மே 10, 2025 11:53 PM

Google News

ADDED : மே 10, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி: ''ஜனார்த்தன ரெட்டியின் சட்டப்போராட்டம் தொடரும்,'' என, அவரது மனைவி லட்சுமி அருணா கூறி உள்ளார்.

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ரெட்டியின் மனைவி லட்சுமி அருணா, நேற்று தன் கணவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். எல்.இ.டி., திரை மூலம் தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

அவர் கூறியதாவது:

என் கணவர், யாருக்கும் அநீதி இழைத்தது இல்லை. அவர் பொது வாழ்வில் அனைவருக்கும் நீதியை வழங்கி உள்ளார்.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றங்கள் அனைத்தும் விரைவில் தவிடுபொடியாகும். சிறையில் இருந்து விரைவில் வெளியில் வருவார்.

சட்ட போராட்டத்தை தொடருவோம். ஜனார்த்தன ரெட்டியின் கைதால், தொண்டர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us