sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது

/

காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது

காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது

காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது


ADDED : ஜூலை 05, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை, கத்தியால் குத்திக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவின் எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா, 36. திருமணமான இவர், கணவரை பிரிந்து, மைசூரில் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் தங்கி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக, பணியாற்றி வந்தார்.

இவருக்கும், கியாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக், 26, என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில், இருவரும் அப்பகுதியில் அம்பேத்கர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பூர்ணிமாவிடம், தன் காதலை அபிஷேக் வெளிப்படுத்தினார். இதற்கு பூர்ணிமா, வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மறுத்துவிட்டார். மீண்டும் அபிஷேக் வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

கோபமடைந்த அபிஷேக், தான் வைத்திருந்த கத்தியால், பூர்ணிமாவின் தலை, வயிற்றில் குத்தினார். பின், அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, யாரோ தாக்கிவிட்டதாக கூறி, பூர்ணிமாவை ஏற்றி, தனியார் மருத்துவமனை முன் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த லட்சுமிபுரம் போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று கத்தியை கைப்பற்றினர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

தலைமறைவாக இருந்த அபிஷேக்கை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us