/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோகோ விளையாட்டில் மங்களூரு வடக்கு அணி சாம்பியன்
/
கோகோ விளையாட்டில் மங்களூரு வடக்கு அணி சாம்பியன்
ADDED : அக் 16, 2025 11:22 PM

மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டில், மங்களூரு வடக்கு அணி முதல் இடம் பெற்றது.
தட்சிண கன்னடா மாவட்டம், சுப்ரமண்யாவின் பிளிநெலே பள்ளி விளையாட்டு அரங்கில், நேற்று முன் தினம் 14 வயது, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிறுவர், சிறுமியருக்கான கோகோ விளையாட்டு போட்டிகள் நடந்தன.
14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில் மங்களூரு வடக்கு அணி முதலிடமும், புத்துார் தாலுகா அணி இரண்டாவது இடமும் பிடித்தது. இதே வயதில் சிறுமியர் பிரிவில் மங்களூரு வடக்கு அணியினர் சாம்பியன் பட்டமும், மங்களூரு தெற்கு அணி இரண்டாம் இடமும் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவிலும், சிறுமியர் பிரிவிலும் முறையே மங்களூரு வடக்கு அணியினர் முதலிடம், புத்துார் அணியினர் இரண்டாவது இடம் பெற்றனர்.
14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் 'ஆல் ரவுண்டர்' ஆக மோக்ஷித் கவுடா, சிறந்த 'கேச்சர்' ஆக ஆர்பாஜ், சிறந்த 'ரன்னர்' ஆக மயான்ஸ்; இதே வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் முறையே கன்னிகா ஷெட்டி, ஹலீஷா, ஜான்ஹவி பரிசு பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில், ஆல் ரவுண்டர் ஆக வர்ஷித், சிறந்த கேச்சர் ஆக சாத், சிறந்த ரன்னர் ஆக ஆகாஷ்; இதே வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் முறையே ஷைலி, யோக்யா, ஜெயலட்சுமி பரிசு பெற்றனர்.
- நமது நிருபர் -