/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலில் மூழ்கி மருத்துவ மாணவி பலி
/
கடலில் மூழ்கி மருத்துவ மாணவி பலி
ADDED : ஜன 28, 2026 06:48 AM
உத்தர கன்னடா: கார்வார் கடற்கரையில், கடலில் சிக்கிய மருத்துவ மாணவி உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொப்பால் மாவட்டத்தின் கே.எம்.சி.மருத்துவ கல்லுாரியை சேர்ந்த, 17 மருத்துவ மாணவ - மாணவியர், உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் கோகர்ணாவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அனைவரும் கடலில் விளையாடி கொண்டிருந்தனர். திடீரென வந்த ராட்சத அலை, இரு மாணவ - மாணவியரை இழுத்துச் சென்றது. இதில், முகமது அலி, 22, என்ற மாணவர் எப்படியோ கரையை அடைந்தார். கல்யாணி, 22, என்ற மாணவி நீரில் மூழ்கினார்.
அங்கிருந்த சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர்வாசிகள் நீண்ட நேரம் தேடி, கல்யாணியை மீட்டனர். பின், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், மாணவி கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கோகர்ணா போலீசார் விசாரிக்கின்றனர்.

