sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை

/

புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை

புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை

புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை


ADDED : ஏப் 15, 2025 06:55 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டுடன் ஆலோசனை நடத்தப்படும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹூப்பள்ளியில் பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது ஒரு கொடூரமான சம்பவம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்படுவார்.

பெங்களூரு வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளதால், பிற மாநிலத்தில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவர்களில் சிலர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை தடுக்க முடியாது. இவர்களால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

இம்மாத துவக்கத்தில் பெங்களூரில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டடு உள்ளார். அவர் விரைவில் பெங்களூரு அழைத்து வரப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us