தகுதியானவர்களுக்கு பதவியில்லை அமைச்சர் அஜய் சிங் ஒப்புதல்
தகுதியானவர்களுக்கு பதவியில்லை அமைச்சர் அஜய் சிங் ஒப்புதல்
ADDED : ஆக 08, 2026 07:02 AM

ராய்ச்சூர்: ''தகுதியானவர்களுக்கு பதவி கிடைப்பது இல்லை,'' என, அமைச்சர் அஜய்சிங் கூறினார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் பதவி கிடைக்காமல் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைவது சகஜம் தான். என் தந்தை தரம் சிங் முதல்வராக இருந்த போது கூட, மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது இல்லை. என் தந்தைக்கு கூட இரண்டு முறை அமைச்சர் ப தவி கிடைக்கவில்லை.
தகுதியானவர்களுக்கு பதவி கிடைப்பது இல்லை. இது நமது மாநிலம், காங்கிரசின் பிரச்னை மட்டுமல்ல. நாடு முழுதும் இப்பிரச்னை உள்ளது.
சிவகுமாரின் அமைச்சரவையில் மூத்தவர்கள், இளையவர்களுக்கு சமமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி மெல்ல குறைகிறது. ராஜினாமா செய்வதாக கூறியவர்கள், முடிவை மாற்றி உள்ளனர். அமைச்சரவையில் காலியாக உள்ள ஒரு இடம், பெண்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
