sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சட்டவிரோத 'லே - அவுட்' அகற்றம்; அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரிக்கை

/

சட்டவிரோத 'லே - அவுட்' அகற்றம்; அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரிக்கை

சட்டவிரோத 'லே - அவுட்' அகற்றம்; அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரிக்கை

சட்டவிரோத 'லே - அவுட்' அகற்றம்; அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரிக்கை


ADDED : ஆக 12, 2025 06:57 AM

Google News

ADDED : ஆக 12, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''கர்நாடக நகர்ப்பகுதிகளில் அமைக்கப்படும் சட்டவிரோத லே - அவுட்கள் தயவு, தாட்சண்யமின்றி அகற்றப்படும்,'' என, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சேகவுடா, விதிமுறை 330ன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியதாவது:

நகர்ப்பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் லே - அவுட்டுகள் அகற்றப்படும். இத்தகைய லே - அவுட்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் லே - அவுட் அமைப்போர், அதன் வடிவம் குறித்து தகவல் தெரிவித்து, முறைப்படி நகர மேம்பாட்டுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல், லே - அவுட் அமைப்பது சட்டவிரோதம்.

இதுபோன்ற லே - அவுட்களின் மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி கிடைக்காது. சட்டவிரோத லே - அவுட்களை கட்டுப்படுத்த, அதிகாரிகளுக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத லே - அவுட்களை கட்டுப்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது, சஸ்பெண்ட் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

நகர்ப்பகுதிகளில் ஏழைகளுக்கு மனை வழங்க திட்டம் வகுக்கப்படுகிறது. பெங்களூரை போன்று, மற்ற நகரங்களிலும் சொத்துகளுக்கு இ - பட்டா அளிக்க, அரசு ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us