/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் போலீசாருடன் அமைச்சர் ஆலோசனை
/
சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் போலீசாருடன் அமைச்சர் ஆலோசனை
சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் போலீசாருடன் அமைச்சர் ஆலோசனை
சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் போலீசாருடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : ஆக 02, 2025 01:57 AM

பெங்களூரு: சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்வதை தடுப்பது குறித்து, மூத்த போலீஸ் அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் வகுப்புவாத கொலைகள் நடக்கின்றன.
கொலை நடந்த பின், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.
சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்பப்படுவதை தடுப்பது; ஆன்லைன் சூதாட்டத்தால் நேரும் தற்கொலைகளை தடுப்பது; இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையில் பேசுவதை தடுப்பதற்கு, சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்ய, உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக விதான் சவுதாவில் உள்ள தன் அலுவலகத்தில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாநில டி.ஜி.பி., சலீம், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி, தகவல் தொடர்பு மற்றும் நவீனமயமாக்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., முருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி:
சமூக வலை தளங்களில் பொய் தகவல் பரப்புவதை தடுப்பது பற்றி, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
தர்மஸ்தலா வழக்கில் சமூக வலை தளங்களில் பொய் தகவல் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய பணிக்கு தகுதியான அதிகாரிகள் பட்டியலில் பிரணவ் மொஹந்தி பெயரும் உள்ளது. அவரது சேவை தேவைப்பட்டால் மத்திய அரசு, எங்களுக்கு கடிதம் எழுத வேண்டும். அவரை அனுப்ப வேண்டுமா, வேண்டாமா என்பது எங்கள் விருப்பம்.
பெங்களூரில் சாலையோரம், தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை போக்குவரத்து போலீசாரே, வாகனங்களை இழுத்துச் செல்வர். இந்த பணியில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

