sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இந்திரா கேன்டீனில் உணவு எம்.எல்.ஏ., கோரிக்கை

/

இந்திரா கேன்டீனில் உணவு எம்.எல்.ஏ., கோரிக்கை

இந்திரா கேன்டீனில் உணவு எம்.எல்.ஏ., கோரிக்கை

இந்திரா கேன்டீனில் உணவு எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜூலை 05, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: “தங்கவயல் இந்திரா கேன்டீனில் உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கூடுதலாக உணவு வழங்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்படும்,” என, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.

ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் இந்திரா கேன்டீன் திறக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா 500 பேர் வீதம் உணவு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகமாக உள்ளது.

நேற்று மதியம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நகராட்சி ஆணையர் மஞ்சுநாத், நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்றனர். 10 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினர். பொதுமக்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

எம்.எல்.ஏ., கூறுகையில், “இங்கு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மேலும் கூடுதலாக உணவு வழங்குமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்படும். சுத்தம், சுகாதாரம் அவசியம் இருக்க வேண்டும். யாரையும் அலட்சியமாக கருதக்கூடாது,” என்றார்.






      Dinamalar
      Follow us