sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்காணிப்பு!: காஷ்மீர் சம்பவத்தால் மாநில அரசு உஷார்

/

கர்நாடகாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்காணிப்பு!: காஷ்மீர் சம்பவத்தால் மாநில அரசு உஷார்

கர்நாடகாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்காணிப்பு!: காஷ்மீர் சம்பவத்தால் மாநில அரசு உஷார்

கர்நாடகாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்காணிப்பு!: காஷ்மீர் சம்பவத்தால் மாநில அரசு உஷார்


ADDED : ஏப் 25, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி, கர்நாடகாவை சேர்ந்த இருவர் உட்பட 26 சுற்றுலாபயணியரை, பயங்கர வாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம், உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சாம்ராஜ் நகரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:

பஹல்காமில் நடந்தது மனிதாபிமானமற்ற சம்பவம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதல் சம்பவமும் காஷ்மீர் மாநிலத்தில் தான் நடந்தது. இதனால், காஷ்மீரில் பாதுகாப்பை தளர்த்தி இருக்க கூடாது.

பஹல்காம் சம்பவத்திற்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வியும் காரணம். பயங்கரவாதிகளை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

பலன் இல்லை


சம்பவம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுப்பது வேறு; சம்பவத்திற்கு முன்பே நடவடிக்கை எடுப்பது வேறு.இரண்டும் மாறுபட்டவை.

மத்திய அரசு தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும். பயங்கரவாதிகளை ஒழிப்பது மத்திய அரசின் பொறுப்பு. இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க காங்கிரஸ் தயார்.

கர்நாடகாவில் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி உள்துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் இறந்த கன்னடர்கள் இருவரின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், அந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் சந்தித்தும் எந்த பலனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜதந்திர முடிவு


உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மைசூரில் அளித்த பேட்டி:

காஷ்மீர் சம்பவம் எதிரொலியாக, நமது மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளேன். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசுக்கு, மாநில அரசு முழு ஆதரவு கொடுக்கும். பயங்கரவாதிகள் திட்டமிட்டு நுழைந்து, அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று உள்ளனர். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்து உள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், அரசியல் செய்ய கூடாது. எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பு, அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு ராஜதந்திர முடிவுகளை எடுத்து உள்ளது. அதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காஷ்மீர் சம்பவத்தின் எதிரொலியாக, சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us