sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை

/

உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை

உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை

உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை


ADDED : ஜூலை 12, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: துமகூரு மாவட்டம், துருவகெரேவின், பிராமணர் வீதியில் வசித்தவர் கமலம்மா, 78. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ரகு, 55, உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இளைய மகன் பெங்களூரில் வசிக்கிறார்.

கமலம்மாவின் கணவர் காலமானதால், மூத்த மகன் ரகுவுடன் வசித்து வந்தார். ரகுவுக்கு திருமணமாகவில்லை. சமீப நாட்களாக தாயுக்கும், மகனுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

நீண்ட காலமாக அவதிப்பட்டனர். இதனால் மனம் நொந்த இவர்கள், நேற்று மதியம், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பெங்களூரில் வசிக்கும் இரண்டாவது மகன், தாய்க்கு போன் செய்தார். பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. கலக்கம் அடைந்த மகன், பக்கத்து வீட்டாருக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அவர்களும் பார்த்தபோது, தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த துருவகெரே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலைக்கு முன், தாயும், மகனும் எழுதி வைத்த கடிதத்தில், 'உடல் நலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொள்கிறோம்' என குறிப்பிட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us