ADDED : ஜூன் 01, 2026 12:10 AM
அ நிறம் | அளவு
பாகல்கோட்: நுாறு வயதுக்கும் மேலாக வாழ்ந்த தாய், காலமானதை தாங்க முடியாமல் மகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின், தோதலபாகி கிராமத்தில் வசித்தவர் கங்கவ்வா சென்னபசப்பா, 101. வயது முதிர்வு காரணமாக, நோயால் அவதிப்பட்ட இவர், மே 29ம் தேதி இரவில் காலமானார். நேற்று முன் தினம், இறுதி சடங்குகள் தடந்தன.
இவரது மகள் ஹனமவ்வா, 76, அதானியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தாய் இறந்த தகவலறிந்து, தோதலபாகி கிராமத்துக்கு நேற்று முன் தினம் காலை வந்தார்.
தாயின் உயிரற்ற உடலை கண்டு, மிகுந்த துக்கத்துக்கு ஆளான அவர், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
