தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு மண்டல வன அதிகாரி மர்ம மரணம்

 மைசூரு மண்டல வன அதிகாரி மர்ம மரணம்

 மைசூரு மண்டல வன அதிகாரி மர்ம மரணம்


ADDED : ஜன 20, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு புறநகர் பஸ் நிலையம் அருகில் மைசூரு மண்டல வன அதிகாரி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் காந்தராஜ் சவான், 35. மைசூரு டி.நரசிபுரா மண்டல வன அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர் மானுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட இவர், மைசூரு புறநகர் பஸ் நிலையம் அருகில் மதர் தெரசா சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பார்ட்டிக்கு அழைத்திருந்தார்.

இருவரும் குடித்து விட்டு, சிறிது நேரம் வெளியே நடந்து சென்று விட்டு, மீண்டும் லாட்ஜில் தங்கினர். நேற்று காலையில் கண் விழித்த மானு, காந்தராஜ் இல்லாததால், லாட்ஜில் உள்ள ஊழியர்களிடம் கேட்டார்.

வெளியே சென்றதாக கூறிய தகவலை அடுத்து, வெளியே சென்று தேடினார். அப்போது, புறநகர் பஸ் நிலையம் அருகில் சாலை ஒன்றில் அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக லஸ்கர் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us