sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி

/

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி


ADDED : ஜன 29, 2026 06:11 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மேல்சபை நியாயமான முறையில் நடக்கவில்லை' என்று கூறி, மேல்சபையின் நடைமுறை தொடர்பான புத்தகத்தை, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அவமதித்த, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மேல்சபையில் நேற்று காலை பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மேல்சபையை மதியம் வரை, தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஒத்திவைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின், மேல்சபை மீண்டும் துவங்கியதும், பா.ஜ., உறுப்பினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி, பசவராஜ் ஹொரட்டி கூறினார்.

அப்போது திடீரென கோபம் அடைந்த, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மேல்சபை நியாயமான முறையில் நடக்கவில்லை என்று கூறி, மேல்சபையின் நடைமுறை மற்றும் உறுப்பினர்கள் நடத்தை தொடர்பான புத்தகத்தை கிழித்து எறிந்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேல்சபையை அவமதித்த சலவாதி நாராயணசாமியை வெளியேற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட பசவராஜ் ஹொரட்டி, எதிர்க்கட்சி தலைவர் அவசரப்பட்டு புத்தகத்தை கிழித்து விட்டார். அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சலவாதி நாராயணசாமி பேசுகையில், ''சபை முறையாக செயல்படவில்லை என்பதே, எனது ஆட்சேபனை. நான் சபையை அவமதிக்கவில்லை,'' என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us