தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜூன் 21, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் மனைகள், வீடுகள் வாங்க செலுத்த வேண்டிய முன்பண தொகை பாதியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சுப்பராயனப்பா பாளையாவில் உள்ள 'கனிமினிகே' வீட்டுவசதி வளாகத்தில் கண்காட்சி நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 200 பேர், மனைகளை முன்பதிவு செய்தனர். இதில், 125 பேருக்கு மனைகள் குறித்த கடிதம் வழங்கப்பட்டது.

பெங்களூரு, சிக்கநாயக்கனஹள்ளி, குலிவாரா கிராமத்தை சேர்ந்தவர் மாரி பசவய்யா. இவருக்கு சொந்தமான பசுவின் மடி நேற்று அறுக்கப்பட்டதில், பசு உயிரிழந்தது. முன்விரோதம் காரணமாக, குருசித்தப்பா என்பவர் செய்திருக்கலாம் என தாவரகெரே போலீசில், பசவய்யா புகார் அளித்துள்ளார்.

ஷிவமொக்காவில் இருந்து பேரணியாக வந்த 50க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனத்தை சேர்ந்த பைக் டாக்சி 'மாஜி' ஓட்டுநர்கள், நேற்று பெங்களூரு விதான் சவுதா முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 'பைக் டாக்சியை தடை செய்வதற்கு பதிலாக, உரிய விதிகளை அமல்படுத்துங்கள்' என, கோரிக்கை விடுத்தனர்.

ஓட்டுநர்கள் போராட்டம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us