/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹோலி கொண்டாட்டம் ஒடிசா வாலிபர் கொலை
/
ஹோலி கொண்டாட்டம் ஒடிசா வாலிபர் கொலை
ADDED : மார் 06, 2026 05:20 AM
நெலமங்களா: ஹோலி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா கோவனஹள்ளி கிராமத்தில் ஹலோபிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா, பீஹார் மாநிலங்களை சேர்ந்த வாலிபர்கள் 30 பேர் வேலை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் தொழிற்சாலை வளாகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். குடிபோதையில் இருந்ததால் வாலிபர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த நேரத்தில் அங்கு வந்த தொழிற்சாலையின் பாதுகாவலர் கிரிஷ், வாலிபர்களை திட்டினார்.
இதையடுத்து சண்டையிட்ட வாலிபர்கள் ஒன்று சேர்ந்து, கிரிஷை தாக்க முயன்றனர். கோபம் அடைந்த கிரிஷ் கத்தியை எடுத்து வந்து, ஒடிசா மாநிலத்தின் விக்கிகுமார், 27 என்பவரை குத்தினார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிரிஷ் அங்கிருந்து தப்பினார். நெலமங்களா போலீசார் அவரை தேடுகின்றனர்.

