sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு

/

கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு

கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு

கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு


ADDED : மே 15, 2025 02:58 AM

Google News

ADDED : மே 15, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா:கப்பலில் கார்வாருக்கு வந்த பாகிஸ்தான் நபர், இந்திய மண்ணில் கால் வைக்கவிடாமல் கடலோர காவல் படை அதிகாரிகள் தடுத்தனர்.

காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பின், மத்திய அரசு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை நம் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. அவர்களின் விசாவையும் ரத்து செய்தது. எனவே ஆயிரக்கணக்கானோர் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில், உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் துறைமுகத்துக்கு, 12ம் தேதியன்று சரக்கு கப்பல் ஒன்று ஈராக்கில் இருந்து வந்தது. 'எம்.டி.ஆர்., ஓஷியன்' என்ற பெயர் கொண்ட அந்த கப்பலில் இருந்த தொழிலாளர்களில் 15 இந்தியர்கள், இரண்டு சிரியா நாட்டவர்களுடன், பாகிஸ்தான் நபர் ஒருவரும் இருந்தார்.

இதையறிந்த துறைமுக அதிகாரிகள், கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக துறைமுகத்துக்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், பாகிஸ்தான் நபரை கப்பலில் இருந்து இறங்க விடாமல் தடுத்தனர். அவரது மொபைல் போன் மற்றும் ஆவணங்களை, கப்பலின் கேப்டன் மூலமாக பறிமுதல் செய்தனர்.

இரண்டு நாட்களாக அவர், கப்பலிலேயே இருந்தார். இந்திய மண்ணில் கால் வைக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சரக்கை இறக்கிய பின், கப்பல் நேற்று காலை கார்வாரில் இருந்து, சார்ஜாவுக்கு புறப்பட்டது. அதே கப்பலில் பாகிஸ்தான் நபரை, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us