ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ADDED : ஏப் 01, 2026 03:47 AM

அ நிறம் | அளவு
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்கிறது.
பெங்களூரு சிவாஜி நகர் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா கோவிலில், இன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கும், ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அதன் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
பக்தர்கள் வருகை தந்து அருளாசி பெற கேட்டு கொண்டுள்ளனர்.
