sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

/

குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு


ADDED : நவ 12, 2025 07:46 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''அரசு பள்ளிகளில் வரும் 14ம் தேதி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்தப்படும்,'' என, மாநில துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மாநிலத்தில் உள்ள உயர்நிலை, துவக்க நிலை அரசு பள்ளிகளின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்தப்படுகிறது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.

இந்த சந்திப்பின் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தங்கள் குழந்தைகள் எப்படி கல்வி கற்கின்றனர் என்பதை பெற்றோர் நேரடியாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளிகளின் அடிப்படை வசதிகள் செய்து தருவது எளிதாக இருக்கும்.

கர்நாடகாவில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளன. அரசு பள்ளிகளில் எப்போது அட்மிஷன் துவங்கும் என பெற்றோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us