sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மூத்த மகள் காதல் திருமணம் பெற்றோர், தங்கை தற்கொலை

/

மூத்த மகள் காதல் திருமணம் பெற்றோர், தங்கை தற்கொலை

மூத்த மகள் காதல் திருமணம் பெற்றோர், தங்கை தற்கொலை

மூத்த மகள் காதல் திருமணம் பெற்றோர், தங்கை தற்கொலை


ADDED : மே 25, 2025 02:29 AM

Google News

ADDED : மே 25, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரும், நீர்த்தேக்கப்பகுதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே அணையின் நீர்த்தேக்க பகுதியில் பூதனுார் கிராமத்தில் இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதை அங்குள்ளவர்கள் பார்த்தனர். வாகனம் அருகில் மூன்று ஜோடி காலணிகள் இருந்தன.

அதிர்ச்சி அடைந்த அவர்கள், எச்.டி.கோட்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் கடிதம் இருந்ததை பார்த்தனர். கடிதத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மஹாதேவ சுவாமி, 55, தன் மனைவி மஞ்சுளா, 42, மகள் ஹர்ஷிதா, 16, ஆகியோருடன் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தது.

மஹாதேவசுவாமி, மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் அர்பிதா, 20, சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் வேதனை அடைந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us