sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில் தாமதம் பிடதியில் பயணியர் போராட்டம்

/

 பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில் தாமதம் பிடதியில் பயணியர் போராட்டம்

 பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில் தாமதம் பிடதியில் பயணியர் போராட்டம்

 பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில் தாமதம் பிடதியில் பயணியர் போராட்டம்


ADDED : மார் 02, 2026 05:36 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதமாக வந்ததால், பிடதி ரயில் நிலையத்தில் பெங்களூரு - மைசூரு அசோகபுரம் ரயில் முன் போராட்டம் நடத்திய பயணியரை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

பெங்களூரில் இருந்து மைசூரு அசோகபுரத்துக்கு மெமு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. பெங்களூரு கெஜ்ஜாலா அருகே சென்றபோது, தொழில்நுட்பம் காரணமாக, ஒன்றரை மணி நேரம் நின்றது.

அது சரியான பின், புறப்பட்ட ரயில், பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதி ரயில் நிலையத்துக்கு சென்றது. அங்கும் ஒரு மணி நேரம் ரயில் நின்றது.

ஏற்கனவே தாமதமாக வந்ததால், கோபத்தில் இருந்த பயணியர், மேலும் ஒரு மணி நேரம் ரயில் நின்றதால், கடுப்பான அவர்கள், ரயிலுக்கு முன் நின்று போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், பிரச்னைக்கான காரணத்தை கூறியும், அவர்கள் கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பயணியர் மீது லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

அதன் பின்னரே ரயில் மீண்டும் புறப்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us