sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குவியும் பயணியர் போலீசார் திணறல்

/

குவியும் பயணியர் போலீசார் திணறல்

குவியும் பயணியர் போலீசார் திணறல்

குவியும் பயணியர் போலீசார் திணறல்


ADDED : செப் 29, 2025 06:02 AM

Google News

ADDED : செப் 29, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தசரா நிகழ்ச்சிகளை காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருவதால், மைசூரின் பல சாலைகள் போக்குவரத்து நெருக்கடியால் தத்தளிக்கின்றன.

மைசூரு தசரா உலக பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் தசரா நிகழ்ச்சிகளை காண, லட்சக்கணக்காண மக்கள் வருவது வழக்கம். இம்முறையும் சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர்.

மைசூரில் நடக்கும் தசரா நிகழ்ச்சிகளை ரசிக்கின்றனர். இதனால் நகரின் பல்வேறு சாலைகளில், வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றனர்.

கன் ஹவுஸ் சதுக்கம், பன்னி மண்டபம், தேவராஜ் அர்ஸ் சாலை, அரண்மனை சாலைகள், உணவு மேளா, மலர் கண்காட்சி நடக்கும் இடங்கள், விளையாட்டு போட்டி நடக்கும் மைதானம், மிருகக்காட்சி சாலை, எம்.ஜி., சாலை உட்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது.

இரவு நேரத்தில் அரண்மனை மின் அலங்காரத்தை பார்க்க, பெருமளவில் மக்கள் வருவதால், இரவிலும் வாகனங்கள் அதிகம் காணப்படுகின்றன.

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாமல், மைசூரு போலீசார் திணறுகின்றனர். ஆனால் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us