sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது

/

 ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது

 ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது

 ரூ.11 லட்சம் திருடிய போலீஸ் ஏட்டு கைது


ADDED : டிச 05, 2025 08:58 AM

Google News

ADDED : டிச 05, 2025 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சைபர் மோசடி வழக்கில் கைதானவரின், காரில் இருந்த 11 லட்சம் ரூபாயை திருடிய, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் பவன். சைபர் மோசடி வழக்கில் இவரை கடந்த மாதம், சி.சி.பி., சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்காக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பவன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின் பவன் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். காரை சோதனை செய்த போது, பையில் வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, சைபர் கிரைம் பிரிவு ஏட்டு சபியுல்லா பணத்தை திருடியது தெரிந்தது.

அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மீதம் 9 லட்சம் ரூபாயில் தனது மனைவிக்கு விலை உயர்ந்த நகைகளை அவர் பரிசளித்தது தெரிந்தது. சபியுல்லாவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us