/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புனித வளனார் பல்கலை வளாகத்தில் நாளை பொங்கல் கொண்டாட்டம்
/
புனித வளனார் பல்கலை வளாகத்தில் நாளை பொங்கல் கொண்டாட்டம்
புனித வளனார் பல்கலை வளாகத்தில் நாளை பொங்கல் கொண்டாட்டம்
புனித வளனார் பல்கலை வளாகத்தில் நாளை பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 09, 2026 06:32 AM
பெங்களூரு: பெங்களூரு புனித வளனார் பல்கலை வளாகத்தில், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு லால்பாக் டபுள் ரோட்டில் புனித வளனார் பல்கலை கழகம் உள்ளது. இங்கு படிக்கும் தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழ் சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் சார்பில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை வரை நடக்கிறது. தமிழர்கள் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
சிறப்பு விருந்தினராக பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தி ன் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார், திரைப்பட இயக்குநர் ரிச்சர்ட் விஜயகுமார் பங்கேற்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மதியம், 12:30 முதல் 1:30 மணி வரை, பல்கலை கழகத்தில் உள்ள மேஜிக் ஹாலில் கோலப்போட்டி நடைபெற உள்ளது.

