/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச புகைப்படங்கள் காதலன் 'திடுக்' தகவல்
/
ஆபாச புகைப்படங்கள் காதலன் 'திடுக்' தகவல்
ADDED : பிப் 11, 2026 06:47 AM
பேட்ராயனபுரா: தாய், சித்தியின் ஆபாச புகைப்படங்களை காதலனுக்கு, இளம்பெண் அனுப்பிய வழக்கில், காதலன் 'திடுக்' தகவல் கூறி உள்ளார்.
பெங்களூரு பேட்ராயனபுராவில் வசிக்கும் 19 வயது இளம்பெண், தனது தாய், சித்தி இரவில் துாங்கும் போது அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, காதலனுக்கு அனுப்பினார்.
இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் தாய், மகள், காதலன் வருண் மீது போலீசில் புகார் செய்தார். இருவர் மீதும் வழக்கு பதிவானது. இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
நானும், இளம்பெண்ணும் காதலித்தோம். காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால், அவர்களை மிரட்டுவதற்காக ஆபாசமாக புகைப்படும் எடுக்கும்படி, நான் தான் கூறினேன் என்று, போலீஸ் முன்பு வருண் திடுக் தகவலை கூறினார்.
காதலர்கள் மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள புகைப்படங்களை அழிக்க, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

