/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மென்பொருள் புதுப்பித்தல் பணி தபால் அலுவலகங்கள் இயங்காது
/
மென்பொருள் புதுப்பித்தல் பணி தபால் அலுவலகங்கள் இயங்காது
மென்பொருள் புதுப்பித்தல் பணி தபால் அலுவலகங்கள் இயங்காது
மென்பொருள் புதுப்பித்தல் பணி தபால் அலுவலகங்கள் இயங்காது
ADDED : ஜூன் 20, 2025 11:11 PM
பெங்களூரு: பெங்களூரு பொது தபால் அலுவலகம், ஆர்.டி., நகர் தலைமை தபால் அலுவலகம், ஜெயநகர் தலைமை தபால் அலுவலகம், ராஜாஜி நகர் தலைமை தபால் அலுவலகம், சென்னபட்டணா தலைமை தபால் அலுவலகம் ஆகியவற்றிலும், அதனுடன் தொடர்புடைய துணை, கிளை தபால் நிலையங்களிலும், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பம் 2.0க்கான புதுப்பித்தல் பணிகள் இன்று நடக்க உள்ளது.
இதனால், மேற்கூறிய தபால் நிலையங்கள் இன்று இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் ஹெச்.ஏ.எல்., ஜாலஹள்ளி, பசவனகுடி தலைமை தபால் அலுவலகங்களிலும், அதன் துணை, கிளை தபால் அலுவலகங்களை பயன்படுத்தலாம் என தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மென்பொருள் புதுப்பித்தல் பணிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை விரைவுபடுத்துவதற்காக செய்யப்படுகின்றன.
இதன் மூலம், வரும் 23ம் தேதி, திட்டமிட்டபடி புதிய மென்பொருள் தபால் அலவலகங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.