sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஓராண்டாக கூலி பாக்கி சிறை கைதிகள் அதிருப்தி

/

ஓராண்டாக கூலி பாக்கி சிறை கைதிகள் அதிருப்தி

ஓராண்டாக கூலி பாக்கி சிறை கைதிகள் அதிருப்தி

ஓராண்டாக கூலி பாக்கி சிறை கைதிகள் அதிருப்தி


ADDED : ஜூலை 07, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஓராண்டாக கூலிப்பணம் வழங்காதது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு, சிறையில் அடைபட்டுள்ள கைதிகள், சிறையில் செய்யும் பணிகளுக்கு தினக்கூலி வழங்கப்படும்.

அதேபோன்று கர்நாடகாவின், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சமையல், துப்புரவு, கைவினை பொருட்கள், தோட்டப்பணி என, பல்வேறு வேலைகளை செய்கின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக 540 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த கூலித்தொகை, கைதிகளின் குடும்பத்தினருக்கு, மிகவும் உதவியாக உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டாக கைதிகளுக்கு கூலித்தொகை வழங்கப்படவில்லை. பெலகாவியின் ஹிண்டல்கா சிறையில், 837 கைதிகள் உள்ளனர். இவர்களில் 368 கைதிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 68 கைதிகள் கூலி வேலை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓராண்டாக, கூலி வழங்கப்படவில்லை. 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை பாக்கியுள்ளது. இந்த தொகையை வழங்கும்படி, அரசுக்கு சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியும் பணம் வரவில்லை.

ஷிவமொக்கா மாவட்ட மத்திய சிறையில், 750 கைதிகளில் 70 பேர் தினக்கூலி பெறுகின்றனர். இவர்களுக்கும் கூலித்தொகை கிடைக்கவில்லை. அதேபோன்று கலபுரகி, தார்வாட், விஜயபுரா, பல்லாரி, ராய்ச்சூர் என, பல்வேறு சிறைகளின் கைதிகளுக்கு கூலித்தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.

கைதி ஒருவரின் தந்தை கூறுகையில், 'குற்ற வழக்கு ஒன்றில், என் மகன் கைதாகி ஹிண்டல்கா சிறையில் இருக்கிறார். அவர் செய்யும் பணிக்கு தினக்கூலி கிடைத்து வந்தது.

'இந்த தொகை குடும்பத்துக்கு, பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவியது. ஆனால் ஓராண்டாக பணம் வரவில்லை. குடும்ப நிர்வகிப்புக்கு பணம் இல்லாமல், மற்றவரிடம் கையேந்த வேண்டியுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us