ADDED : ஜூன் 04, 2025 11:24 PM

அ நிறம் | அளவு
அறிவிக்கப்படாத அவசரநிலை
கர்நாடகாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமியை கலபுரகியில் ஐந்து மணி நேரம் ஒரு அறையில் சிறை வைத்தனர். எம்.எல்.சி., ரவிகுமாரை விசாரணை என்ற பெயரில், போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றே ஆறு மணி நேரம் அமர வைக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் உண்மையை சொல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது.
-ரவி,
பா.ஜ., - எம்.எல்.சி.,
