/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரேணுகாசாமி கொலை வழக்கு செப்., 9க்கு ஒத்திவைப்பு
/
ரேணுகாசாமி கொலை வழக்கு செப்., 9க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 12, 2025 11:25 PM

ஷிவமொக்கா: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கின் விசாரணை, செப்., 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இக்கொலை வழக்கு விசாரணை, 57வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஈரப்பா பாவடி நாயக் முன்னிலையில் நேற்று வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக், கேசவ், நிகில் ஆகியோர் தவிர, தர்ஷன் உட்பட மற்ற 14 பேர் ஆஜராகியிருந்தனர்.
தர்ஷன் வக்கீல் சுனில் குமார் வாதிடுகையில், ''இவ்வழக்கில் இருந்து தங்களை விடுக்கும்படி சிலர் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம். இப்போது எந்த நிலையில் விசாரணை தொடர்கிறதோ அதுவே தொடர வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை தேதியை நிர்ணயிக்காமல், விசாரணையை செப்., 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

