/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெட்ரோல் பங்கில் ரூ.15,000 கொள்ளை
/
பெட்ரோல் பங்கில் ரூ.15,000 கொள்ளை
ADDED : பிப் 15, 2026 06:31 AM
மைசூரு: ஹூன்சூரு பில்கெரேயில் இரவு நேரத்தில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஊழியரை தாக் கி, 15,000 ரூபாய் கொள்ளையடித்து சென்றனர்.
மைசூரு மாவட்டம் ஹூன்சூர் தாலுகா பில்கெரே அருகில் கரிமுத்தனஹள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு, கடந்த 12ம் தேதி இரவு, 10:30 மணிக்கு நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய நான்கு பேர், பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த கேஷியர் அஜய் கு மார், ஊழியர் தினேஷ் ஆகியோரை தாக்கி, 15,300 ரூபாயை கொள்ளையடித்தனர்.
ஊழியர் தினேஷ் அவர்கள் பிடியில் இருந்து தப்பி கூச்சலிட்டதால், கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பில்கெரே போலீசார் விசாரிக்கின்றனர்.

